ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க சென்ற கேரள இளைஞன் பட்ட துன்பங்களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
கலகலப்பான பிரேமலு, விறுவிறுப்பான மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் போல அல்லாமல் இந்த படம் கொஞ்சம் சீரியஸான கதை அம்சத்துடன் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் அதே போன்ற வரவேற்பை முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகின்றனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 150 கோடி இந்தப் படம் வசூலித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பிரித்விராஜ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.