2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 150 கோடி வசூல் கிளப்பில் இணைய தயாராகி வருகிறது. இந்த படம் ரசிகர்களை மட்டுமல்ல, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது. குறிப்பாக பஹத் பாசிலின் அந்த ரங்கா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தையும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் எல்லோரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியும் சமீபத்தில் ஆவேசம் படம் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“படம் அருமையாக இருக்கிறது. மொத்த படத்திலும் பஹத் பாசில் தன்னுடைய ஸ்டைலால் அசத்தியுள்ளார். என்னுடைய கதாபாத்திரங்கள் சிலவற்றின் குறிப்புகள் இருந்தாலும் கூட அதை பஹத் பாசில் அவரது சொந்த ஸ்டைலில் செய்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார் மம்முட்டி. இதுபோன்று பல கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் மம்முட்டி நடித்துள்ளார். பஹத் பாசில் கூட ஒரு பேட்டியில், ராஜமாணிக்கம் மற்றும் சட்டம்பிநாடு ஆகிய படங்களில் மம்முட்டியின் கதாபாத்திரங்களை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டு இந்தப்படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.