தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிவா கொரட்டாலா இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வந்த ஒரு நில சர்ச்சை வழக்கு தொடர்பாக ஜூனியர் என்டிஆரின் பெயரும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது. அதாவது கடந்த 2003ல் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி கில்ஸ் பகுதியில் 36 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி இருந்தார். அதன் பிறகு 2013ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
தற்போது அந்த இடத்தை வைத்திருப்பவருக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, இந்த இடம் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமானது என்பது போன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இந்த இடத்தை பத்து வருடங்களுக்கு முன்பே விற்று விட்டதாகவும் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.