2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றும் விதமாக மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்த படம் காட்டை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் கதையாக உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்பு, தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தார் மகேஷ்பாபு. இந்த நிலையில் இந்த படத்தின் மகேஷ்பாபுவுக்கு இணையாகவே இன்னொரு கதாபாத்திரமும் இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு புதிய செய்தி வெளியானது.
அதாவது இந்த படத்தை தயாரிக்கும் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் காஸ்டிங் டைரக்டராக விரியன் சாமி என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் மகேஷ்பாபு கதாபாத்திற்கு இணையாக பயணிக்கும் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தியை மறுத்துள்ள துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் நாங்கள் விரியன் சாமி என்பவரை காஸ்டிங் டைரக்டராக நியமிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்திகள் எதுவுமே உண்மை இல்லை. தங்களது நிறுவனம் வாயிலாக வெளியாகும் செய்திகள் மட்டுமே உண்மை என்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த திடீர் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.