ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கும் மிக முக்கிய பங்கு அதன் கதை மற்றும் கதாசிரியருக்கு உண்டு. மலையாளத்தில் கதாசிரியர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. படங்களின் டைட்டில் கார்டில் கதாசிரியர்களின் பெயர் வரும்போது ரசிகர்கள் கைதட்டி விசில் அடிக்கும் நிகழ்வுகளும் அங்கே நடக்கின்றன. இப்படி கதாசிரியர்களுக்கான முக்கியத்துவம் வெறும் அங்கீகாரமாக மட்டும் இல்லாமல் இயக்குனர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கதாசிரியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனரும் கதாசிரியருமான மிதுன் மானுவேல் தாமஸ்.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரான மிதுன் மானுவேல் தாமஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான அஞ்சாம் பாதிரா என்கிற சைக்கோ திரில்லர் வெற்றி படத்தை கொடுத்தவர். இயக்குனராக இருந்து கொண்டே சில படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.. அந்த வகையில் தற்போது புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள டர்போ படத்திற்கும் இவர்தான் கதை எழுதியுள்ளார்.
வரும் வாரம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த படம் குறித்து பேட்டி அளித்தபோது, “ஒரு படத்திற்கு கதை தான் ஆணிவேர். கதை சரியில்லை என்றால் மொத்த படமும் தோல்வியை தழுவும். கதையினால் தான் ஒரு படம் வெற்றி பெறுகிறது. அதனால் ஒரு இயக்குனருக்கு சமமான சம்பளம் கதாசிரியருக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் மிதுன் மானுவேல் தாமஸ்.