தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வருடமே வெளியாகிவிட்டது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறது என்று படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.