இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் அந்தஸ்தில் பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக அரசியல் பயணத்தையும் துவக்கிய சுரேஷ்கோபி தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு திருச்சூர் எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டு தற்போது மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவரது மகள் பாக்யாவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் முன்னிலையில் திருச்சூரில் நடைபெற்றது.
சுரேஷ்கோபியின் மூத்த மகன் கோகுல் சுரேஷ் ஒரு நடிகராக சில வருடங்களுக்கு முன்பே திரையுலகில் நுழைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ்கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷ் விரைவில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‛கும்மாட்டி களி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னும் முதல் படம் வெளியாகாத நிலையில் தற்போது காதலில் விழுந்துள்ளார் மாதவ் சுரேஷ். மலையாளத்தில் ‛ரணம்' என்கிற படத்தில் நடித்த செலின் ஜோசப் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் மாதவ் சுரேஷ்.
சமீபத்தில் செலினின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த மாதவ், தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், “இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரின் பிறந்தநாள். என்னுடைய வாழ்க்கையில் நான் கடுமையான சூழலில் இருந்த நிலையில் எதிர்பாராமல் என் வாழ்க்கையில் நுழைந்து எனக்கு பின்னால் ஒரு பாறையாக நிற்பவர். யாருடைய புன்னகை என்னுடைய நாளை பிரகாசமாக்குமோ, யாருடைய சத்தம் என் காதுகளில் இசை போல கேட்குமோ, யாருடைய வருகையால் எனக்கு உடனடி உற்சாகம் கிடைக்குமோ அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.