ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் அந்தஸ்தில் பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக அரசியல் பயணத்தையும் துவக்கிய சுரேஷ்கோபி தேசிய கட்சியான பா.ஜ.,வில் இணைந்து சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு திருச்சூர் எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டு தற்போது மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவரது மகள் பாக்யாவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் முன்னிலையில் திருச்சூரில் நடைபெற்றது.
சுரேஷ்கோபியின் மூத்த மகன் கோகுல் சுரேஷ் ஒரு நடிகராக சில வருடங்களுக்கு முன்பே திரையுலகில் நுழைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ்கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷ் விரைவில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‛கும்மாட்டி களி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னும் முதல் படம் வெளியாகாத நிலையில் தற்போது காதலில் விழுந்துள்ளார் மாதவ் சுரேஷ். மலையாளத்தில் ‛ரணம்' என்கிற படத்தில் நடித்த செலின் ஜோசப் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் மாதவ் சுரேஷ்.
சமீபத்தில் செலினின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த மாதவ், தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், “இன்று எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரின் பிறந்தநாள். என்னுடைய வாழ்க்கையில் நான் கடுமையான சூழலில் இருந்த நிலையில் எதிர்பாராமல் என் வாழ்க்கையில் நுழைந்து எனக்கு பின்னால் ஒரு பாறையாக நிற்பவர். யாருடைய புன்னகை என்னுடைய நாளை பிரகாசமாக்குமோ, யாருடைய சத்தம் என் காதுகளில் இசை போல கேட்குமோ, யாருடைய வருகையால் எனக்கு உடனடி உற்சாகம் கிடைக்குமோ அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.