மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தமிழ், தெலுங்கு திரை உலகைப் போலவே மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்கள் அவ்வப்போது ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளியான கமிஷனர் திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் 4k தொழில்நுட்பத்தின் மாற்றப்பட்டு வரும் ஜனவரி மாதம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பிரபல கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்க, ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கோபியின் பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார்.
இந்த படம் சுரேஷ்கோபியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து அவரை முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திராவிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. தமிழில் சுரேஷ்கோபி என்கிற நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம் தான். அதேபோல ஆந்திராவிலும் இந்த படம் 100 நாள் ஓடியது. சமீப வருடங்களாக சுரேஷ்கோபி தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் ஏதோ ஒன்று இரண்டு மட்டுமே வெளியாகி வருகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது கமிஷனர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.