2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராகவும் கடந்து சில வருடங்களாக குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகர் பாபு ஆண்டனி. தமிழில் 'பூவிழி வாசலிலே, சூரியன்' உள்ளிட்ட படங்களில் கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர்.
தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடும் குதிர சாடும் குதிர' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாபு ஆண்டனி. பிரேமலு படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் அல்தாப் உசேன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் பாபு ஆண்டனி.
இவர் பஹத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் தமிழில் பூவிழி வாசலிலே', மலையாளத்தில் உருவான 'பூவின் புதிய பூந்தென்னல்' உள்ளிட்ட படங்களில் நடித்த போது அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த பஹத் பாசில் இவரது மடியில் ஏறி அமர்ந்து விளையாடும் சிறுவனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இன்று பான் இந்திய நடிகராக மாறி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாபு ஆண்டனி.