வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'மார்கோ'. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி அதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெற்றி பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கொலை செய்பவர்களை ஹீரோக்களாக சித்தரிப்பதா என்று 'மார்கோ' படத்தை தாக்கி பேசி உள்ளார்.
கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது...
"சமீபகாலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப்பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய (மார்கோ) ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.