கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் இயக்குனர் சாச்சி டைரக்ஷனில் அய்யப்பனும் கோஷியும் என்கிற படம் வெளியானது. பிரித்விராஜ் பிஜூமேனன் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற ஒரு இளம் ராணுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டிருந்த போதுதான் இயக்குனர் சாச்சி எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவினர்.
ஆனாலும் அவரது கனவு படமான இதை எடுத்தே தீருவது என முடிவு செய்த பிரித்விராஜ், சாச்சியின் உதவியாளரும் தன்னுடன் லூசிபர் படத்தில் பணியாற்றியவருமான ஜெயன் நம்பியாரின் டைரக்சனில் இந்த படத்தில் நடிக்க தொடங்கினார். இடையில் படப்பிடிப்பின் போது பிரித்விராஜுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள், லூசிபர் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை உருவாக்கும் பணியில் என பிஸியாகிவிட்டார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இது நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இரண்டரை வருடத்திற்கு மேலான கடுமையான உழைப்பு வெற்றிகரமாக நினைவுக்கு வந்துள்ளது என்று கூறியவர் பிரித்விராஜ் இந்த படத்தை டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.