ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சாக்கோ போபன், பிரியாமணி நடிப்பில் 'ஆபிசர் ஆன் டூட்டி' என்கிற படம் வெளியானது. ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை சாக்லேட் ஹீரோவாக பார்த்து வந்த குஞ்சாக்கோ போபன் இந்த படத்தில் ரப் அண்ட் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமாக காட்சி அளித்தார். அதுமட்டுமல்ல ஒரு டீன் ஏஜ் குழந்தைக்கு தந்தையான அவர் இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட ஆறு டீன் ஏஜ் இளைஞர்களின் அடாவடிகளை எதிர்கொண்டு அவர்களை அதிரடியாக விரட்டி தாக்கும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்தன.
இந்த ஆறு இளைஞர்களில் அவர்களது கேங் லீடராக நடித்திருந்தவர் நடிகர் ரம்ஜான். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் சிறுவயதாக இருந்த போது அதாவது 2011ல் குஞ்சாக்கோ போபன் நடித்த 'த்ரீ கிங்ஸ்' மற்றும் 'டாக்டர் லவ்' ஆகிய படங்களில் சிறுவயது குஞ்சாக்கோபன் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக ஒரு தகவலை சொன்னார்.
இதைக் கேட்ட குஞ்சாக்கோ போபன் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனார். தன்னுடன் படத்தில் வில்லனாக மோதிய இளைஞன் தன்னுடைய சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவனா என்கிற விஷயம் படப்பிடிப்பு சமயத்தில் கூட தெரியாமல், படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகு தெரியவந்ததில் அவர் நிஜமாகவே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். இந்த விஷயத்தை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று அவரை அன்பாக கடிந்தும் கொண்டார் குஞ்சாக்கோ போபன்.