தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரை உலகில் நடிகர் குஞ்சாக்கோ போபனை போன்றே உருவத் தோற்றம் கொண்ட மேடை கலைஞர் சுனில்ராஜ் என்பவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் குஞ்சாக்கோ போபன் போலவே நடிக்கிறீர்களே, இதனால் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் எதார்த்தமாக, “இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. நடிகர் குஞ்சாக்கோ போபன் சுரேஷிண்டேயும் சுமலதாயிண்டேயும் ஹிருதயஹரியாய பிரணயகதா என்கிற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தின் படிப்பில் சில சமயம் கலந்து கொள்ள முடியாதபடி அமெரிக்காவில் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக என்னை வைத்து தான் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கூறினார்.
நெட்டிசன்கள் பலரும் இந்த பேட்டியை பார்த்துவிட்டு குஞ்சாக்கோ போபனை தொழில் பக்தி இல்லாதவர் என்பது போன்று கடும் விமர்சனங்களை தெரிவிக்க துவங்கினர். தான் சொன்ன விஷயம் இப்படி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதை கவனித்த சுனில்ராஜ் உடனடியாக, 'குஞ்சாக்கோ போபன் தான், தன்னால் அமெரிக்காவிலிருந்து வரமுடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சில காட்சிகளில் என்னை வைத்து படமாக்கும்படி சிபாரிசு செய்தார். இதில் அவர் செய்த தவறு எதுவும் இல்லை” என்று சமாளிப்பாக ஒரு விளக்கத்தை கூறியுள்ளார்.