ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் ஹீரோக்கள் இயக்குனராவது என்பது அரிதான விஷயம் தான். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்துவிட்டு போய்விடுவார்கள். அதே சமயம் இதில் சற்று விதிவிலக்காக நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர், ப்ரோ டாடி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார். மூன்றாவதாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவ்வளவு ஏன் மோகன்லால் கூட பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். ஆனால் இயக்குனராக அவர் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகரும் கதாசிரியருமான அனூப் மேனன், மோகன்லாலை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார்.
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகராக இவர் வலம் வந்தாலும் அடிப்படையில் ஒரு கதாசிரியரும் கூட. ஏற்கனவே அவ்வளவாக வரவேற்பு பெறாத மூன்று படங்களையும் இயக்கியுள்ளார் என்றாலும் இவர் கதை எழுதிய படங்கள் பல நல்ல வெற்றியை பெற்றுள்ளன. அதேசமயம் மோகன்லால் உடன் இணைந்து பல படங்களில் நடித்து அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்தான் அனூப் மேனன். அதனாலேயே தற்போது இவருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் மோகன்லால்.