ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஒப்பம். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியிருந்தார். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்தார். இந்த படம் வெற்றியை பெற்றது. அதே சமயம் இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த கொடுங்கல்லூர் ஆசம்பி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் பிரின்சி பிரான்சிஸ் என்பவரின் சோசியல் மீடியா கணக்கிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது அனுமதி இன்றி இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். அதிலும் போலீஸ் கிரைம் பைலில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் என்பது போன்று இவரது புகைப்படம் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
தனது அனுமதியின்றி பயன்படுத்தியதும், இதுபோன்று ஒரே மோசமான காட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதும் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் சமூகத்தில் தேவையில்லாத சங்கடத்தையும் ஏற்படுத்தியதாக கூறி 2017ல் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரின்சி பிரான்சிஸ். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் இந்த புகைப்படத்தை பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொடுத்த உதவி இயக்குனர் மோகன்தாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்
இதற்கிடையே படத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை நீக்கும்படி பலமுறை அவர் கோரிக்கை வைக்கும் இப்போது வரை அவரது புகைப்படம் நீக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் 1.68 லட்சம் வழக்கு செலவு தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.