தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்புரான் திரைப்படம் வெளியானது. கடந்த 2016ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருந்த இந்த படத்தில் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வெவ்வேறு விதமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் தான் இது போன்ற வழக்குகளை தொடர்ந்தார்கள். அதேசமயம் மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி ஆரம்பத்தில் இது பற்றி கருத்து கூற மறுத்தாலும் சமீபத்தில் அவரிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, “இது எல்லாம் தேவையில்லாத சர்ச்சைகள்.. எல்லாமே மக்களின் மனநிலையை வேறு ஒரு பக்கமாக திருப்பி பிசினஸ் செய்யும் முயற்சி தான் என்று கூறினார்.
அவர் பிசினஸ் செய்கிறார்கள் என்று படக்குழுவினரை கூறினாரா அல்லது இதுபோன்று சர்ச்சையை கிளப்புவர்களை பற்றி கூறினாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதால் தற்போது இந்த படத்தின் ஆரம்பத்தில் நன்றி கார்டில் காட்டப்பட்ட தனது பெயரை தூக்கி விடுமாறு படக்குழுவினரிடம் சுரேஷ்கோபி கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் ஒன்றாக சுரேஷ்கோபியின் பெயரும் நன்றி கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.