சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் |
தெலுங்கு சினிமாவில் புதிது புதிதாக இளம் நடிகர்கள் வந்தாலும் இன்றும் மாஸ் குறையாத சீனியர் நடிகராக தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. படங்களில் இவரது அதிரடியான சண்டைக் காட்சிகளும் வசனங்களும் தெலுங்கையும் தாண்டி இவருக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளன. அதுமட்டுமல்ல கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் ஆந்திராவில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் எம்எல்ஏ.,வாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாலகிருஷ்ணா.
இந்த நிலையில் சமீபத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொகுதியில் பஸ் போக்குவரத்தில் பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. வெறுமனே கொடியசைத்து திட்டத்தை துவக்கி வைக்காமல் பேருந்திலேயே ஏறி ஓட்டுனராக மாறி அரசு பேருந்தை சிறிது தூரம் இயக்கியும் காட்டினார் பாலகிருஷ்ணா. கூடியிருந்த பொதுமக்களும் அவரது ரசிகர்களும் அவர் பேருந்து ஓட்டுவதை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார்கள். மக்களும் ரசிகர்களும் பாராட்டினாலும் கூட ஒருவேளை பாலகிருஷ்ணா இப்படி அரசு பேருந்து ஓட்டியது தவறான செயல் என்று கூட யாரேனும் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.