கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

தமிழ், தெலுங்கு திரை உலகைப் போலவே மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்கள் அவ்வப்போது ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளியான கமிஷனர் திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் 4k தொழில்நுட்பத்தின் மாற்றப்பட்டு வரும் ஜனவரி மாதம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பிரபல கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்க, ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கோபியின் பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார்.
இந்த படம் சுரேஷ்கோபியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து அவரை முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திராவிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. தமிழில் சுரேஷ்கோபி என்கிற நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம் தான். அதேபோல ஆந்திராவிலும் இந்த படம் 100 நாள் ஓடியது. சமீப வருடங்களாக சுரேஷ்கோபி தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் ஏதோ ஒன்று இரண்டு மட்டுமே வெளியாகி வருகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது கமிஷனர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.