ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி தருவதாகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய பட வெளியீட்டின் போது, கிடாய் வெட்டி பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்களை இனி அதுபோல் உயிர்பலி செய்யக்கூடாது என்று கூறி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர் ஒருவர் திரையரங்கு முன்பாக சமீபத்தில் கட்டப்பட்டிருந்த 'வாரணாசி' படத்தின் மகேஷ்பாபு போஸ்டர் முன்பாக நின்றுகொண்டு ஒரு பாட்டிலை எடுத்து தனது தலையில் உடைத்து, தலையில் வழிந்த ரத்தத்தால் போஸ்டரில் மகேஷ் பாபுவின் நெற்றிக்கு ரத்தத் திலகம் வைக்கிறார். அதன்பிறகு அவருக்கு தீபாராதனையும் காட்டுகிறார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹீரோக்கள் தங்களது ரசிகர்களுக்கு ரொம்பவே கண்டிப்பும் கறாருமாக உத்தரவு போட்டால் கூட இவர்களின் செயல்களை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை.