தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் சிறைவாசம் அனுபவித்து, தற்போது அவர் நிரபராதி என மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப்பின் ஆதரவாளர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகைகள் பார்வதி, ரீமா கலிங்கல், உள்ளிட்ட பலரும் இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் பாதிக்கப்பட்ட நடிகையுடன் பல படங்களில் இணைந்து நடித்தவரும் அவரது நண்பருமான நடிகர் ஆசிப் அலி இந்த தீர்ப்பு குறித்து கூறும் போது, “எப்போதுமே நான் பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் தான் நிற்கிறேன்.. ஆனால் இந்த தீர்ப்பை மதிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நடிகை அந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து முதன் முதலாக நேரில் சென்று தனக்கு நேர்ந்த அவமானத்தை விளக்கியது பிரபல வில்லன் நடிகர் லாலிடம் தான். அவர்தான் அப்போது நடிகைக்கு ஆதரவாக போலீசில் புகார் அளிக்கும் வரை உடன் இருந்தார். தற்போதைய தீர்ப்பு பற்றி அவர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று மட்டும் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு திலீப்புக்கு ஆதரவாக வந்தாலும் கூட தீர்ப்பை கடுமையாக விமர்சிக்க கூடாது என்பதால், “மாப்பிள்ளை அவர்தான்.. ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்கிற பாணியில் பலரும் நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவருக்காக குரல் கொடுப்பதுடன், தற்போது வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும் பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.