இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19 (1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இந்து வி.எஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ரொம்பவே சுவாரசியமான அதேசமயம் மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம் என்று ஒரு பேட்டியில் நித்யா மேனன் கூறியிருந்தாலும், அதுபற்றிய ரகசியத்தை அவர் உடைக்கவில்லை.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் இயக்குனர் இந்து வி.எஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன என்பதை வெளிபடுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “விஜய்சேதுபதி இந்தப்படத்தில் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் தமிழ், மலையாளம் இரண்டையும் சரிசமமான அளவில் பேசியிருக்கிறார்.. மலையாள வசனங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, படப்பிடிப்பு தளத்திற்கு முன்கூட்டியே வந்து, அன்றைய காட்சிகள், வசனங்களை குறித்து விவாதித்து, அதன்பின்னர் படப்பிடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்” என புகழ்ந்து கூறுகிறார் இயக்குனர் இந்து வி.எஸ்.