முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பணமாக நிதி உதவி செய்வதுடன் ஒரு சிலர் மருத்துவ உதவிகளையும் நேரடியாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் மோகன்லால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி திட்டத்தை தற்போது துவங்கியுள்ளார்.
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 200 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் போர்ட்டபிள் எக்ஸ்-ரே மிசின் என மூன்று அடுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது” என கூறியுள்ளார்..