ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தனது தந்தையின் பிறந்தாநாளான மே-31 அன்று வழக்கமாக தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை, போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் அப்படி எந்த தகவலும் அவர் படம் குறித்து வெளியாகவில்லை. அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணா, ஒரு பேட்டியில் மகேஷ்பாபு தனது கோரிக்கை ஒன்றை நிராகரித்தது குறித்து பகிர்ந்துகொண்ட புதிய தகவல் வெளியானது.
அதாவது கடந்த 70 வருடங்களுக்கு முன் என்.டி.ராமாராவ் மற்றும் ரங்காராவ் இருவரும் இணைந்து நடித்த பாதாள பைரவி என்கிற மாயாஜால படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்தியில் ரீமேக் செய்து அதில் மகேஷ்பாபு நடிக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம் தந்தை கிருஷ்ணா.
ஆனால் மகேஷ்பாபுவோ தந்தையின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டாராம். ரொம்ப பழைய படம், இந்த காலத்தில் ரீமேக் செய்யும்போது, அதுவும் தனக்கு செட்டாகுமா என்கிற காரணத்தினால் அவர் மறுக்கவில்லை.. பொதுவாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில்லை என்பதையும் மகேஷ்பாபு கொள்கையாவே வைத்திருப்பதுதான், தனது தந்தையின் கோரிக்கையை நிராகரிக்க காரணமாம்.