ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் அவ்வபோது பேன்டஸி கலந்த வரலாற்று கதைகளை படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் என்கிற படம் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கடமட்டத்து கத்தனார் என்கிற பேய் ஓட்டும் பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயசூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. காரணம் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் பணி புரிவதற்காக ஹாலிவுட்டிலிருந்து எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்து வராமல் கேரளாவில் உள்ள மிகச்சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ரோஜின் தாமஸ். அதேசமயம் படத்தில் இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை விட அதில் சொல்ல இருக்கின்ற கதைதான் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரோஜின் தாமஸ்