ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்திபடங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அதோடு இளவட்ட நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு படுகவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜூவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை என்றொரு சர்ச்சை எழுந்ததோடு, பிரியாமணியைவிட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. அதையடுத்து, முஸ்தபா ராஜூ தன்னை விட்டு பிரியவில்லை என்று சொன்ன பிரியாமணி, கண்டிப்பாக தன்னிடம் திரும்பி வருவார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி கணவர் முஸ்தபாவுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரியாமணி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இதன்காரணமாக பிரியாமணி கணவரை பிரிந்து விட்டதாக வெளியான வதந்திகள் அனைத்தும் தூள் தூளாகியுள்ளது.