எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தென்னிந்திய சீனியர் குணச்சித்திர நடிகர்களை அழைத்து நடிக்க வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் வித்யாபாலனின் தந்தையாக தற்போது நடிகர் தலைவாசல் விஜய் ஹிந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஜங்லீ, பெல்பாட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் தலைவாசல் விஜய்.
“தும்ஹாரி சுலு, டர்ட்டி பிக்சர் ஆகிய படங்களில் வித்யாபாலனின் நடிப்பை பார்த்து வியந்த நான், இப்போது இந்தப்படத்தில் நேரில் அவரது மாறுபட்ட மற்றுமொரு நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். புரிந்துகொள்வதற்கு ரொம்பவே கடினமான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என கூறியுள்ளார் தலைவாசல் விஜய். தற்போது ஊட்டியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தலைவாசல் விஜய் அடுத்ததாக மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரபல விளம்பர பட இயக்குனரான ஷிர்ஷா குகா தகுர்த்தா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் தடைகளற்ற நவீன மனித உறவுகள் பற்றி அலசுகிறது. இந்தப்படத்தில் இலியானா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.