இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ள படம் குருதி ஆட்டம். இதில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பலமுறை இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது. இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்போர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை, இந்த நிலையில் ராக் போர்ட் தயாரிப்பில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வருகிறது. எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பு தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.