வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

கோயம்புத்தூர் பொண்ணு ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமையவில்லை. ஆனாலும் அவர் நடித்து முடித்துள்ள காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசுரன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த படங்கள் பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது.
இந்த நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார் ஆத்மிகா. தடைபட்டு நிற்கும் படங்கள் வெளிவரவும், புதிய வாய்ப்புகள் கிடைக்கவும் அவர் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பதி சென்ற படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆத்மிகா "ஒளி, ஒளி, தெய்வீகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.