சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக இருந்த ஸ்டன்ட் சிவா, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான அகண்டா படத்திற்கும் சண்டைக்காட்சி அமைத்திருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஸ்டன்ட் சிவா அளித்த பேட்டி: ‛லட்சுமி நரசிம்மன், சிம்ஹா' படங்களை அடுத்து, 3வது முறையாக ‛அகண்டா' படத்தில் பாலகிருஷ்ணாவுடன் பணியாற்றியுள்ளேன். ஆக்சன் காட்சிகள் மட்டும் 85 நாள் படமாக்கப்பட்டது. என் இருமகன்கள், கெவின் மற்றும் ஸ்டீவன் இப்படத்தில் எனக்கு உதவியாக இருந்தனர். அவர்களாலும், இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் பாலகிருஷ்ணாவாலுமே எனக்கு இந்த வெற்றி சாத்தியமானது. நாம் சொல்லிக்கொடுத்ததை பாலகிருஷ்ணா செய்யும் போது அது பன்மடங்கு மாஸ் ஆகிவிடுகிறது. அவருக்கு பயமே இல்லை. சண்டைக்காட்சியில் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டிய போதும் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்துக் கொடுத்தார். விரைவில் தமிழ் படம் ஒன்றில் வில்லனாக நடிக்கிறேன். சண்டைக்காட்சியில் நிறைய புதுமைகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.