மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
சினிமா வாய்ப்புள் இல்லாவிட்டாலும் இணையதளம் மூலம் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இதனாலேயே இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் ‛தில்லு இருந்தா போராடு' என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
வனிதாவுடன் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர், சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும் கவனிக்கிறார்கள். கே.முரளிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது.
பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவின் உதவி கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் தில்லு இருந்தா போராடு. இதில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா நடிக்கிறார். இவ்வாறு கூறினார்.