தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மோசடி வழக்கில் காமெடி நடிகர் டாக்டர் சீனிவாசன் டில்லியில் கைது செய்யப்பட்டார்.
அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' என்ற படத்தின் மூலம் நடிகரானார். தொடர்ந்து ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தனக்கு தானே ‛பவர்ஸ்டார்' என பட்டம் சூட்டிக் கொண்டு சினிமாவில் அந்த பெயரில் வலம் வந்தார்.
டில்லியில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் கடன் பெற்று தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட தொடர்பாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இருமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் சீனிவாசன். இந்நிலையில் டில்லியில் வைத்து சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.