விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
தமிழ் சினிமவில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் நிறைய பேர். அவர்களில் தற்போது தனது வித்தியாசமான நடிப்பால் பரபரப்பாகப் பேசப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த 'மாநாடு' படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அவருடைய வசனங்கள் வீடியோ மீம்ஸ் செய்யும் அளவிற்கு பிரபலமானது.
'மாநாடு' வெற்றிக்குப் பிறகு அவரைத் தேடி பல புதிய படங்களின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சில படங்கள் இன்னும் வெளியாக வேண்டி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இப்படத்திற்காக அவருக்கு முன்பை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல். 'மாநாடு' வெற்றிக்குப் பிறகு எஸ்ஜே சூர்யாவும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
இதனிடையே, தெலுங்குத் தயாரிப்பாளர் ஒருவர் எஸ்ஜே சூர்யாவை அவரது படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அணுகியதாகவும் ஏழு கோடி ரூபாயை எஸ்ஜே சூர்யா சம்பளமாகக் கேட்க அதிர்ச்சியுள்ள தயாரிப்பாளர் அமைதியாகச் சென்றதாகவும் தகவல் பரவி வருகிறது.