தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநடி' என தெலுங்கில் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குனர் நாக் அஷ்வின். அடுத்ததாக 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனராக நாக் அஷ்வின், பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திராவின் சேர்மன் ஆனந்த் மகிந்திராவிடம் ஒரு உதவி கேட்டிருக்கிறார்.
அதில், “அன்புள்ள ஆனந்த் மகிந்திரா சார்… மிஸ்டர் பச்சன், பிரபாஸ், தீபிகா நடிக்கும் இந்தியன் சயின்ஸ் பிக்சன் படமான 'பிராஜக்ட் கே' என்ற படத்தை உருவாக்கி வருகிறோம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு அப்பால் தனித்துவமான சில வாகனங்களை இந்த உலகத்திற்காக உருவாக்கி வருகிறோம். நினைத்ததைச் செய்தால் இந்தப் படம் நமது தேசத்தின் ஒரு பெருமையாக இருக்கும். நாம் திறமை வாய்ந்த இந்தியர்கள் கொண்ட டிசைனர்கள், எஞ்சினியர்கள் வைத்திருக்கிறோம் என உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். ஆனால், எங்களது திட்டத்தின் அளவு, நாம் ஒரு கையைப் பயன்படுத்தக் கூடியது. இது போன்ற ஒரு படம் இதுவரை முயற்சி செய்யப்படவில்லை. எதிர்காலத்தை வடிவமைக்க உங்களது உதவி இருந்தால் பெருமை கொள்வோம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆனந்த் மகிந்திரா, “எதிர்காலத்தின் இயக்கத்தை கற்பனை செய்த உங்களுக்கு உதவும் வாய்ப்பை நாங்கள் எப்படி மறுக்க முடியும். எங்களது உலக தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் வேலு மகிந்திரா, நிச்சயம் இதற்கு உதவுவார். அவரது வலிமை உங்களுக்குப் பின்னால் உறுதியாக இருக்கும். எதிர்காலத்தில் ஏற்கெனவே அவரது பாதங்கள் உள்ளன,” என்று உதவுவதற்கு உறுதி அளித்துள்ளார்.