கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள் மீதான பார்வையை முற்றிலுமாக மாற்றி வசூல் ரீதியாக பெரிய சாதனையைப் படைத்த படங்கள் 'பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ராஜமவுலி, பிரபாஸ் ஆகிய இருவருக்கும் இந்திய அளவில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிரபாஸ் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்திற்காக கடந்த சில தினங்களாக மும்பையில் பல்வேறு பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் இருக்கிறதா என்ற கேள்வி பிரபாஸிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு, “நானும் ராஜமவுலியும் நல்ல நண்பர்கள். அடிக்கடி எங்களது படங்களைப் பற்றி விவாதிப்போம். நிச்சயம் ஏதாவது ஒன்று நடக்கும். நானும் ராஜமவுலியும் 'பாகுபலி'யை விட்டு விலகவில்லை. யாருக்கு தெரியும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிலளித்துள்ளார் பிரபாஸ்.
அவரது பதில் மூலம் எதிர்காலத்தில் 'பாகுபலி 3' வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. தற்போது பல பிரம்மாண்ட சரித்திரப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால், அவற்றை மிஞ்சும் அளவிற்குத்தான் மூன்றாம் பாகத்தை எடுக்க நினைப்பார் ராஜமவுலி.