திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு அவர்களது ஊரில் கிடைக்காத வாய்ப்புகளும், பிரபலமும் வேறு ஊரில்தான் கிடைக்கும். இங்கிருந்து தெலுங்கிற்குப் போய் பிரபலமானவர் த்ரிஷா. அவருக்கடுத்து சமந்தா, சாய் பல்லவி ஆகியோர் அங்கு மிகவும் பிரபலமானார்கள்.
தமிழில் சாய் பல்லவிக்கு சரியான வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 'தியா, மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்கள் அவருக்கு சுமாரான வெற்றிகளையே தந்தன. அவர் தமிழில் கடைசியாக நடித்த 'என்ஜிகே' படம் 2019ல் வெளிவந்தது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கில் உருவாகியுள்ள 'கார்கி' படத்திலும் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இனி, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.