தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அருண் விஜய் நடித்துள்ள யானை படம் வருகிற 17ம் தேதி வெளிவருகிறது. இதனை அவரது மைத்துனர் ஹரி இயக்கி உள்ளார், பிரியா பவானி சங்கர் ஹீரோயின். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வெளியாவதை தொடர்ந்து அருண் விஜய் அளித்த பேட்டி:
இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம். கோவிட் தொற்று காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படமானது. எனது படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். 3 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு சண்டை காட்சிகள் படத்தில் இருக்கும். அதுவும் யதார்த்தமாக இருக்கும். உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு எடுக்கப்பட்ட காட்சிகள் அவை.
சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுக்கான இடத்தை பிடித்து விட்டீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். எனது மைத்துனராக இருந்தாலும் ஹரியே என்னை ஹீரோவாக இப்போதுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனது பயணம் இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது.
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தபோது இந்த படம் தவறு செய்து விட்டால் நான் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்ப வேண்டும் என்கிற பயம் இருந்தது. ஆனால் அந்த படம் எனது பாதையை திசை மாற்றியது. இப்போது மக்கள் மனதில் எனக்கென தனி இடத்தை பிடித்திருந்தாலும் ஒரு முழுமையான வெற்றிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த படத்திற்கு பிறகு எனது தயாரிப்பில் உருவாகி உள்ள சினம், பார்டர், அக்னி சிறகுகள் படங்கள் அடுத்தடுத்து வெளிவருகிறது. இந்த ஆண்டு இதுவரை புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. யானை ரிலீசுக்கு பிறகே புதிய படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறேன். என்கிறார் அருண் விஜய்.