ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புகழ் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் ரீப்ளேஸ்மெண்ட் ஹீரோயினாக அறிமுகமான சைத்ரா ரெட்டி, தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 'கயல்' தொடரில் கலக்கி வரும் சைத்ரா, சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அஜித் நடித்த வலிமை படத்தில் சைத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. தற்போது அவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடனும் கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சைத்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.