தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சாய்பல்லவி நடித்துள்ள விராட பருவம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டார் சாய்பல்லவி. இதன் ஒரு பகுதியாக சாய்பல்லவி அளித்த ஒரு பேட்டியில் மதங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் இரண்டுமே மதவன்முறை தான். மதத்தின் பெயரால் ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த அகில் என்பவர் சாய்பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை பசு காவலர்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவரின் இந்த கருத்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.