நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
எம்ஜிஆர், கமல் முயற்சித்து செய்ய முடியாதை மணிரத்னம் முடித்து காட்டி உள்ளார். ஆம் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது கை கூடி வரவில்லை. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாகவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல்பாகம் செப்.,30ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் முதல்பாகத்தின் டீசரை வருகிற ஜூலை 7ம் தேதி, சோழ மன்னான தஞ்சாவூரில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட எண்ணி உள்ளார் மணிரத்னம்.