திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அர்ஜுன் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களையும் இயக்கி வந்தார். தற்போது படங்களில் முக்கிய முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ஜுன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அர்ஜுன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரார். இந்தப் படத்தில் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
அர்ஜூனின் ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.