இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் இந்த விழா ஒரு தளமாக அமையும். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து இதனை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது. இந்த திரைப்பட விழாவை நடத்துவதற்கான வழிகாட்டல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். கோவா மாநில முதலமைச்சர் இணை தலைவராக இருப்பார். மத்திய மாநில துறை சார்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களுடன் சினிமா சார்ந்த கலைஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த குழுவில் நடிகை குஷ்பு, மனோஜ் முன்டாஷிர், விபுல் அம்ருத்லால் ஷா, பிரசூன் ஜோஷி, பிரியதர்ஷன், ஹ்ரிஷிதா பட், வாணி திரிபாதி, கரண் ஜோஹர், சுக்விந்தர் சிங், நிகில் மகாஜன், ரவி கொட்டாரக்கரா, ஷூஜித் சர்கார், பாபி பேடி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.