இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீநிதி சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சீரியல்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது கவுன்சிலிங்கிற்கு பிறகு சமூகவலைதளத்தில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள அவர் பாசிட்டிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீநிதியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஸ்ரீநிதியையும் அவர் அக்காவையும் அவரது தாயார் தான் தனியாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைப்பருவத்தின் போது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீநிதி, 'அப்பா இனி உங்களை மிஸ் செய்யவே மாட்டேன். நீங்கள் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன். லவ் யூ அப்பா' என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள் சிலர் ஸ்ரீநிதிக்கு ஆதரவான வார்த்தைகளை கமெண்ட் பாக்சில் உதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்ரீநிதி விரைவில் சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.