இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் தியேட்டர்கள் மூடல், ஹிந்தி படங்கள் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாதவன், ‛‛தியேட்டர்கள் மூடப்படுவதற்கு படங்கள் நன்றாக இல்லை என்பதாலோ, மக்கள் வருகை குறைவு என்பதால் அல்ல. இங்கு பெரும்பாலான தியேட்டர்களில் சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இன்னும் பழைய நிலைமையிலேயே உள்ளன. மக்களின் ரசனை வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. சரியான உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்வது குறைந்துள்ளது'' என்றார்.
மேலும் ஹிந்தி படங்கள் தோல்வி குறித்து பேசியவர், ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பல தரப்பட்ட படங்களை பார்க்க தொடங்கினர். இதனால் அவர்களின் ரசனையும் மாறி உள்ளது. லால் சிங் சத்தா போன்ற நம்பிக்கைக்குரிய படங்களை விட புஷ்பா, கேஜிஎம் மாதிரியான தென்னிந்திய படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. இதை வைத்து மட்டும் எந்த முடிவும் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார்கள்''.
இவ்வாறு மாதவன் கூறினார்.