ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோபி சேத் கூறியதாவது:அமிதாப், எனக்கும் என் மனைவிக்கும் கடவுளைப் போன்றவர். சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய ஸ்டார்.தன் ரசிகர்கள் மற்றும் அனைவருடனும் மிக எளிமையாக பழகுபவர். தன்னுடைய வாழ்க்கை வாயிலாக, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார். இதனால், அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றி உள்ளேன். இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. நான் வீட்டு வாசலில் சிலை வைப்பது, அமிதாப்புக்கு தெரியும். ஆனால், 'நான் இதற்கு தகுதியானவன் அல்ல' என, அவர் பணிவுடன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.