அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
மஞ்சள் சிவப்பு பச்சை படத்திற்கு பிறகு தமிழில் சித்தார்த் நடித்த படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சமீபத்தில் தெலுங்கில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த மகாசமுத்திரம் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் என்.ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவு நனவானதாக கூறியுள்ளார் ஆஷிகா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை கடந்த வருடமே என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள். படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் இரண்டு ஹீரோக்கள் கதை என்பதால் அதில் நடிப்பதற்கு சற்று தயங்கி சம்மதம் தெரிவிக்காமல் இருந்தேன். சில மாதங்கள் கழித்து அதே படக்குழுவினர் என்னை அழைத்து இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் சித்தார்த் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்றும் கூறினார்கள். உடனே மறுயோசனை எதுவும் செய்யாமல் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் நான் பள்ளியில் படித்த காலத்தில் சித்தார்த்தின் படங்களை பார்த்து அவரது ரசிகையாகவே மாறியவள். இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கனவு நனவானதாகவே எனக்கு தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்