தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெங்கட்பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நாகசைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛கஸ்டடி' என பெயரிட்டுள்ளனர். இதில் நாகசைதன்யாக போலீசாக நடிக்கிறார். ஆனால் அவரை ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்து வைத்திருப்பது போன்று இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலானது.