ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட்பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாகசைதன்யா நடிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நாகசைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‛கஸ்டடி' என பெயரிட்டுள்ளனர். இதில் நாகசைதன்யாக போலீசாக நடிக்கிறார். ஆனால் அவரை ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்து வைத்திருப்பது போன்று இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலானது.