தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சின்னத்திரை பிரபலங்களான அபிநவ்யா மற்றும் தீபக்குமாருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகும் கணவன் மனைவி இருவருமே தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். தற்போது அபிநவ்யா கயல் தொடரிலும், தீபக்குமார் விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' விலும் நடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் அபிநவ்யா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார். தொடர்ந்து அவரது வளைகாப்பு புகைப்படங்களும் இன்ஸ்டாவில் கவனம் பெற்றது.
இந்நிலையில், அபிநவ்யா தற்போது அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தீபக் மற்றும் அபிநவ்யா ஒன்றாக சேர்ந்தே குழந்தையின் புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.