சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கமல். இதையடுத்து எச்.வினோத், அதைத்தொடர்ந்து மணிரத்னம் ஆகியோரது படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களான இயக்குனர்கள் ராஜமவுலி, கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் கமலுடன் சந்திப்பு நிகழ்த்திய அதிசய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படம் ஒன்றை நடிகர் பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தாலும் இது எதற்காக, எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்கிற எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை. இதுவரை 4 லட்சம் லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சந்திப்பு பல யூகங்களை ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் கிளப்பி விட்டுள்ளது.
காரணம் இயக்குனர் ராஜமவுலி, கவுதம்மேனன் பிரித்விராஜ், லோகேஷ் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள முக்கிய பிரபலங்கள், கூடவே தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா என அனைவரும் ஒரே சமயத்தில் கமலை சந்தித்துள்ளது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.. இது யூடியூப் சேனல் ஒன்றின் ‛ரவுண்டு டேபிள்' உரையாடல் நிகழ்ச்சியின் போது எடுத்தப்படம் எனவும் கூறப்படுகிறது.