வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு ஓடிசாவில் உள்ள கோராபுட்டில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் எம். எம். கீரவாணியுடன் இணைந்து கம்போசிங்கை தொடங்கி இருக்கிறார் ராஜமவுலி. அதேசமயம் இன்னொரு பக்கம், ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் மேன்கள் ஒரு பெரிய சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை தான்சானியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. அதையடுத்து ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆப்பிரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.