ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் படங்கள் இல்லை என்றாலும், பிற மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் தற்போது திரைக்கு வந்துள்ளன. அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதின் காரணமாகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அது குறித்து உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ‛‛எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதினால் தான் வால்டர் வீரய்யா படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நல்ல முயற்சி என்றும் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.